முல்லைத்தீவில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் அடிப்படையில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் பணிப்பின் பேரில் சென்ற விசேட குழு ஒன்று குறித்த நபரையும் நாட்டு துப்பாக்கியும் கைப்பற்றியுள்ளது.

நேற்று மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட நபர் பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு இன்று நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தில் வள்ளிபுனம் பகுதியை சேர்ந்த 58 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் அத்தோடு T56 ரக துப்பாக்கி ரவை ஒன்றும் குண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
625.0.560.350.390.830.053.800.670.160.91 6 முல்லைத்தீவில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

625.0.560.350.390.830.053.800.670.160.91 2 1 முல்லைத்தீவில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

625.0.560.350.390.830.053.800.670.160.91 1 4 முல்லைத்தீவில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!