புதுக்குடியிருப்பில் ஆர்ப்பாட்டத்திற்காக ஒன்று கூடிய மக்கள்!

நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் பொதுமக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்குமாறு அரசாங்கம் பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ள நிலையில் அரச அலுவலகங்களுக்கும் தனியார் துறை அலுவலகங்களுக்கும் விடுமுறை வழங்குமாறு கூறப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் அமைந்திருக்கின்ற ஆடைத் தொழிற்சாலையில் சுமார் 2000 பேர் வரையில் பணியாற்றுகின்ற நிலையில் குறித்த ஆடைத் தொழிற்சாலைக்கு விடுமுறை வழங்கப்படவில்லை. இன்றும் ஆயிரக்கணக்கானவர்கள் பணிக்கு சமூகம் தருகின்ற நிலையில் இன்று காலை புதுக்குடியிருப்பு பிரதேச மக்களால் எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் குறித்த போராட்ட இடத்திற்கு புதுகுடியிருப்பு பொலிசார் வருகை தந்துள்ள நிலையில் ஆடைத் தொழிற்சாலைக்குள் எவரையும் அனுமதிக்காத நிலையில், ஆடைத் தொழிற்சாலைக்கு முன்பாக பணியாளர்கள் அனைவரும் ஒன்றுகூடி உள்ளனர்.