முறையற்ற வரி அதிகரிப்பை நிறுத்து-வவுனியா வைத்தியசாலை சிற்றூழியர்கள் போராட்டம்

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை  சிற்றூழியர்கள் பல்வேறு கோரிக்கைளை முன் வைத்து நேற்று மதியம் 12.30 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், முறையற்ற வரி அதிகரிப்பை நிறுத்து, முறையற்ற நியமனத்தை வழங்குவதை நிறுத்து, வாழ்வாதாரத்தை அதிகரி, வங்கியில் அதிகரித்த வட்டி வீதத்தைக் குறை, ஊழியர் பற்றாக்குறையை உடன் நிவர்த்தி செய் போன்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

வைத்தியசாலை நுழைவாயில் முன்பாக சுமார் ஒரு மணி நேரம் இந்தப் போராட்டம் நடைபெற்றது.