முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசருக்கு மூத்த சட்டத்தரணிகள் அஞ்சலி.

>மறைந்த முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ்.ஆனந்தகுமாரசாமிக்கு வவுனியா சட்டத்தரணிகள் அஞ்சலியை தெரிவித்துள்ளனர்.

ஆனந்தகுமாரசாமியின் மறைவுக்கு வவுனியா சட்டத்தரணிகளான தாம் இறுதி அஞ்சலியையும் கண்ணீர் அஞ்சலியையும் தெரிவித்து கொள்வதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை ஜனாதிபதி சட்டத்தரணி மு. சிற்றம்பலம் இது தொடர்பில் குறிப்பிடுகையில்,

1970களில் அன்னார் நீதிபதியாக வவுனியாவில் கடமையாற்றியபோது இளம் சட்டத்தரணியாக நான் தொழிலை ஆரம்பித்திருந்தேன்.

சட்ட ஞானமும் மற்றவர்களை மதிக்கும் பண்பும் கொண்ட ஓர் உயர்ந்த நீதிபதியாவார். இக் குணாதிசயங்களே அவரை இந்த நாட்டின் உயர் நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றது.

அவரது இழப்பு எம் அனைவருக்கும் பேரிழப்பாகும். நான் தொழில்புரிந்த நீதிபதிகளில் அவர் ஓர் கனவான் நீதிபதியாவார் என தெரிவித்துள்ளார்.