முன்னாள் இராணுவத் தளபதி குடும்பத்துடன் நாட்டைவிட்டு தப்பியோட்டம்?

முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான மஹேஸ் சேனாநாயக்க தனது குடும்ப சகிதம் டுபாய் நாட்டுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவருக்கு டுபாயிலுள்ள அமெரிக்க நிறுவனமொன்றில் முன்னர் செய்த அதே தொழில் மீண்டும் கிடைத்துள்ளதாக டுபாய் தகவல் வட்டாரங்களை ஆதாரம் காட்டி இன்றைய சிங்கள மொழி மொழி நாளிதழொன்று தெரிவித்துள்ளது.

இவர்கள் டுபாய் நோக்கி குடும்பத்துடன் சென்றுள்ளமை தொடர்பில் அரசாங்கத்துக்கு அறிவிக்கப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.