மியான்மரில் இருந்து நுாற்றுக்கணக்கான மக்கள் இந்தியாவில் தஞ்சம்

மியான்மர் குடிமக்கள் 383 பேர் அகதிகளாக மிசோராம் மாநிலத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இராணு­வப் புரட்­சிக்­குப் பின்­னர் மியான்­மரில் இருந்து 383 பேர் எல்­லை­யைக் கடந்து மிசோ­ராம் மாநி­லத்­துக்­குள் தஞ்­சம் புகுந்­துள்­ள­னர். இத்­த­க­வலை மிசோ­ராம் அரசு அதி­காரி ஒரு­வர் உறு­திப்­ப­டுத்தி உள்­ளதாக இந்­திய ஊட­கம் செய்தி வெளியிட்டுள்ளது.

மியான்­மாரில் இராணு­வப் புரட்சிக்கு எதி­ராக பொது­மக்­கள் நடத்தி வரும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.

இந்­நி­லை­யில் அங்­கி­ருந்து இந்­திய எல்­லை­யைக் கடந்து மிசோ­ராம் மாநி­லத்­துக்­குள் பலர் அக­தி­க­ளாக வரு­வது அதி­க­ரித்து வரு­கிறது.