சர்வதேச விசாரணையை வலியுறுத்தி எழுச்சியுடன் நடைபெற்ற பேரணி நிறைவு!

சிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறு கோரிய யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் நல்லை ஆதீனம் முன்பாக நிறைவடைந்துள்ளது.

Protest and Rally in Jaffna demanding an international inquiry 3 1 சர்வதேச விசாரணையை வலியுறுத்தி எழுச்சியுடன் நடைபெற்ற பேரணி நிறைவு!

குறித்த போராட்டம், யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்காவில் இருந்து  இன்று  காலை ஆரம்பமாகியிருந்த  பேரணி,   சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம்  இடம்பெற்றுவரும் நல்லை ஆதீனம் முன்பாக  நிறைவடைந்துள்ளது.

Protest and Rally in Jaffna demanding an international inquiry 6 சர்வதேச விசாரணையை வலியுறுத்தி எழுச்சியுடன் நடைபெற்ற பேரணி நிறைவு!

குறித்த போராட்டத்தில், வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள், சிவில் சமூகத்தினர், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அரசியல் கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.