அவுஸ்திரேலியா: கடல் கடந்த தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு கொரோனா தொற்று

அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம் செயல்பட்டு வரும் பப்பு நியூ கினியா தீவில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்தும் அதிகரித்துவரும் பின்னணியில் அங்குள்ள அகதிகள் பலருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பப்பு நியூ கினியாவின் மனுஸ் தடுப்புமுகாமில் முன்னர் தடுத்துவைக்கப்பட்டிருந்த சுமார் 6 அகதிகளுக்கு கொரோனா தொற்று இனங்காணப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகமான எஸ்பிஎஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது.