மியான்மர் அகதிகளை திருப்பி அனுப்பக்கோரும் மலேசிய பிரதமர்

ஆசியான் நாடுகளின் தலைவர்களுக்கு இடையிலான கூட்டத்தில் பங்கேற்ற மலேசிய பிரதமர் முகைதீன் யாசின், மலேசியாவில் அகதிகளுக்கு எதிரான மனநிலை நிலவுவதன் காரணமாக ரோஹிங்கியா அகதிகள் உள்ளிட்ட மியான்மர் தஞ்சக்கோரிக்கையாளர்களை பாதுகாப்பாக திருப்பி அனுப்ப மலேசியா எண்ணுவதாகத் தெரிவித்திருக்கிறார்.

“ஏற்கனவே எங்களது தடுப்பு முகாம்கள் நிரம்பியுள்ளன. புலம்பெயர்ந்தவர்களை மீள்குடியமர்த்துவதாக உறுதியளித்த நாடுகள் எதிர்வரும் காலத்தில் அதனைச் செய்வதற்கான சூழல் தென்படவில்லை,” என அவர் தெரிவித்திருக்கிறார்.