மியான்மருக்கு திரும்ப விரும்பாதவர்களை மியான்மருக்கு நாடுகடத்தக்கூடாது

“மியான்மருக்கு திரும்ப விரும்பாதவர்களை மியான்மருக்கு நாடுகடத்தக்கூடாது,” என அவுஸ்திரேலிய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருக்கின்றனர் வெளிவிவகாரங்கள் தொடர்பான எதிர்க்கட்சியின் பேச்சாளர் பென்னி வாங் மற்றும் உள்துறை விவகாரங்களுக்கான பேச்சாளர் கிறிஸ்டினா கெனிஅலே.

மியான்மரில் மோசமடைந்து வரும் நிலை அவுஸ்திரேலியாவில் மியான்மர் புலம்பெயர் சமூகத்தை கடுமையாகப் பாதித்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டு இருக்கின்றனர்.

கடந்த பிப்ரவரி மாத கணக்குப்படி, மியான்மரைச் சேர்ந்த 3,366 விசாவாசிகள் அவுஸ்திரேலியாவில் உள்ளனர். அதில் 1,680 பேர் மாணவர்கள், 612 பேர் இணைப்பு விசாக்களில் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.