மியான்மரில் இராணுவ ஆட்சி: இந்தியாவில் தஞ்சமடைந்த ஆயிரக்கணக்கான மியான்மரிகள்

மியான்மரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது முதல் அந்நாட்டிலிருந்து சுமார் 5,600 மியான்மரிகள் வெளியேறி இந்தியாவின் மிசோரம் மாநிலத்தில் தஞ்சமடைந்திருக்கின்றனர்.

இதில் தேசிய ஜனநாயக லீக் கட்சியின் 18 நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளடங்கியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை மட்டுமின்றி, இராணுவ ஆட்சி காரணமாக ஏற்பட்டுள்ள பதற்றத்தால் சுமார் 60,700 பேர் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர் என ஐ.நா. அகதிகள் முகமை தெரிவித்துள்ளது.