மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த 18 வயது இளைஞன்!

யாழ்ப்பாண நகரப் பகுதியில் உள்ள பிரபல குளிர்பான விற்பனை நிலையத்தில் பணியாற்றிய இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுளது.

இதில் தேவாலய வீதி சங்கானை பகுதியைச் சேர்ந்த நல்லகுமார் நிஷாந்தன் வயது 18 என்ற இளைஞரே உயிரிழந்தவராவார்.

மேல்தளத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த பொழுது பாதுகாப்பற்ற முறையில் சுற்றப்பட்டிருந்த மின்சார வயரில் கால் பட்டதனால் , ஈர நிலத்தில் நின்ற இளைஞர் தூக்கி வீசப்பட்டு உள்ளார்.

திடீரென மின்சாரம் தடை பட்டதை அடுத்து அங்கு கடமையிலிருந்த பணியாளர்கள் மேல் தளத்திற்கு சென்று பார்த்தபோது குறித்த இளைஞன் துடிதுடித்துக் கொண்டு இருப்பதை கண்டுள்ளனர்.

அவரை எடுத்துச் சென்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுமதித்து இருந்த போதும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

இறப்பு விசாரணையினை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் திடீர் இறப்பு விசாரணை அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்றுப் பரிசோதனை பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

குளிர்பான விற்பனை நிலைய நிர்வாகத்தினரின் அசட்டையீனம் காரணமாகவே மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழக்க காரணம் என முதற்கட்ட பொலிஸ் விசாரணையில்