மாகாண சபைத்தேர்தல் நடக்கும்; ஆனால் நடக்காது: பா.அரியநேத்திரன்

மாகாண சபைத் தேர்தலை நடத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இந்த ஆண்டு 2026 ல் இல்லை எனவும் கடந்த வரவு செலவுத் திட்டத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் நோக்கில் அதற்கான நிதியை நாங்கள் ஒதுக்கீடு செய்திருந்தோம். ஆனால் அவ்வாறு திட்டமிட்டிருந்த வேளையில் நாட்டில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன் பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான நெருக்கடி சூழலும் உருவானது.
இதன் காரணமாக, அனர்த்த நெருக்கடி நிலையை சமாளிப்பதற்காக மாத்திரம் 500 பில்லியன் ரூபாய்களை ஒதுக்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு ஏற்பட்டது.  அந்த நிதிதான் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்டிருந்த நிதியாகும். இதன் காரணமாகவே இவ்வருடத்தில் எங்களால் தேர்தலை நடத்த முடியாமல் போனது. அத்துடன்  தற்போது சில புதிய சட்டப் பிரச்சினைகளும் எழுந்துள்ளன.
ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில்  மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்காக இருந்த சட்டரீதி யான வழிமுறைகளில் குளறுபடிகள் ஏற்பட்டதே இதற்குப் பிரதான காரணமாகும் என ரில்வின் சில்வா  கடந்த  (23/05/2026) யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் மக்கள் தொடர்பு அலுவலகத்தைத் திறந்து வைத்ததன் பின் னர்  கூறியிருந்தார்.
அவர் இவ்வாறான கருத்தை கூறி சரியாக மூன்று தினங்களால் (26/05/2026) அன்று மறுதலித்த அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஷ்ச மாகாணசபை தேர்தல் இந்த ஆண்டு நடைபெறும் சட்ட சிக்கலால் தான் தேர்தலுக்கு தேவையான பணம் அரசிடம் உள்ளது எனவும் ரில்வின் சில்வாவின் கூற்றை பொய்யாக்கி பேசினார்.
இதில் யார் கூறியது சரி? மாகாணசபைத் தேர் தல் இந்த வருடம் நடக்கும் ஆனால் நடக்காது என்ற தென்னிந்திய திரைப்பட நகைச்சுவை நடிகர் வடிவேலு பாணியில் தேசிய மக்கள் சக்தி அரசின் நிலைப்பாடு உள்ளதை இவர்களுடைய இரட்டை நிலைப்பாடும் முரண் பட்ட கருத்துக்களும் கோடிட்டு காட்டுகிறது.
மாகாணசபை தேர்தல் தொடர்பாக இறுதி முடிவு தெரியாத நிலை தொடர்கிறது. இதேவேளை கடந்த  (26/05/2026) ல் கொழும்பில் தேர்தல் முறைமை குறித்து ஆராய கூடிய சிவில் அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் கலந்து கொண்ட கூட்டத்தில் 42.எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து கையொப்பம் இட்டு மாகாணசபை தேர்தலை பழைய முறையில் அதாவது விகிதாசார முறையில் இந்த ஆண்டு நடத்தவேண்டும் என ஒரு பிரகடனத்தை தயாரித்து அதில் கையொப்பம் இட்டு ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களுக்கும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கும் வழங்கியுள்னர். இதில் தேசிய மக்கள் சக்தி ஆளும் தரப்பு மட்டுமே கையொப்பம் இடவில்லை.
இந்த 42, எதிர்கட்சிகளில் 15 கட்சிகள் தற்போதைய நாடாளுமன்றத்தில் ஓரிரு எதிர்கட்சி ஆசனங்களுடன் அங்கம் வகிக்கின்றனர். 27 கட்சிகள் நாடாளுமன்றத்தில் எந்த ஆசனங்களையும் பெறாத கட்சிகளாகும்.
தேசியமக்கள் சக்தியில் ஜனாதிபதி அநுரகுமாரதிச நாயக்க தெரிவாகி 159, ஆசனங்களுடன் கடந்த 2024, நவம்பரில் ஆட்சியமைத்தாலும் ஜனாதிபதிக்கும், அவர் களுடைய ஆட்சியில் உள்ள பிரதமர், மற்றும் அமைச்சர் களுக்கு இல்லாத அதிகாரமும், அந்த கட்சிகளை தீர்மா னிக்கும் சக்தியும் பலமும் மக்கள் விடுதலை முன்னணி பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவிற்கே உள்ளது என்பது எழுதப்படாத விதியும் நடைமுறையும் ஆகும். அதனால் ஜனாதிபதி கூறும் விடயங்களை விட ரில்வின் சில்வா கூறும் விடயங்கள் நடைமுறைக்கு சாத்தியமானதாகவே நோக்கவேண்டியுள்ளது.
ரில்வின் சில்வா யாழ்ப்பாணத்தில் இன்னுமொரு உண்மையை கூறினார். மாகாணசபை தேர்தலை நடத்துமாறு இந்தியத் தரப்பிலிருந்து எங்களுக்கு எந்தவிதமான அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை.  இந்திய அரசிற்கும் எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் இடையிலும் மிகச் சிறந்த, நட்புறவானதொரு தொடர்பு நிலவுகிறது. எமக்கிடையே நல்லதொரு புரிதல் காணப் படுகிறது என்றார்.
அவருடைய கருத்தில் இருந்து அறியக்கூடியது இந்திய அரசானது மாகாணசபை தேர்தலை நடத்துமாறு தேசிய மக்கள் சக்தி அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை, ஆனால் தமிழ்தேசிய கட்சிகளின் தலைவர்கள் இந்தியப் பிரதமர், இந்திய துணை ஜனாதிபதி, இந்திய தூதுவர்கள், இந்திய இராஜதந்திரிகளுடன் மாகாணசபை தேர்தல் உடனே நடத்துமாறு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுங்கள் என கூறி அவர்களுடன் வரிசையில் நின்று படம் எடுத்து கூறிய கருத்துகள் எவைகளையும் இந்திய அரசு கணக்கில் எடுக்கவில்லை. தமிழ்தேசிய கட்சிகள் கூறியதை இந்திய அரசு ஒரு பொருட்டாக எடுக்காமல் உதாசீனம் செய்துள்ளனர் என்பதையே ரில்வின் சில்வாவின் கருத்தில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது.
மக்கள் விடுதலை முன்னணி (ஜே வி பி) மற்றும் அதன் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (என் பி பி) ஆகியன கொள்கை அளவில் மாகாண சபை முறைமைக்கு எதிரா னவை. இலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட இந்த முறைமை, நாட்டில் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தத் தவறிவிட்டதாக கருதும் அவர்கள், எதிர்காலத்தில் இதற்கு மாற்றான புதிய அதிகாரப் பகிர்வு முறையை உருவாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை 1987 தொடக்கம் கொண்டுள்ளனர் என்பதே உண்மை.
மாகாண சபை முறைமைக்கு மக்கள் விடுதலை முன்னணி ஆரம்பத்தில் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியது.தற்போதும் அதே நிலைப்பாட்டில் இருக்கின்றீர்களா? என ஊடகவியலாளர் ஒருவர் தற்போதைய அநுராவிடம் (அப்போது அவர் ஜனாதிபதி இல்லை) கடந்த 2023,ஜனவரி,31ல் கேட்ட போது அவர் கூறிய பதில் மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட போது நாட்டில் அமைதியற்ற தன்மை காணப்பட்டது. அக்காலக்கட்டத்தில் சிங்கள அரசியல்வாதிகளுக்கும், தமிழ் தலைமைகளின் இணக்கப்பாடான பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட வில்லை. இந்தியாவின் தேவைக்காகவே மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆனால் தற்போது நிலைமை மாற்றமடைந்து விட்டது. தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காகவே மாகாண சபை முறைமை தற்போது உள்ளது. ஆகவே மாகாண சபை முறைமையை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல எதிர்க்க போவதில்லை என கூறினார்.
2024 செப்டம்பர் 21 ல் ஜனாதிபதி தேர்தலில் தெரிவாகிய அநுரா 2024 நவம்பர் 14 பொதுத்தேர்தலில் 159 அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்த பின்னர் 2025 பெப்ரவரியில் ஊடகங்களுக்கு கருத்து கூறிய மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர்  ரில்வின் சில்வா, 13ஆவது திருத்தத்தின் கீழான மாகாண சபை முறை மையானது இலக்குகளை அடையவில்லை ஆனால், தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வை வழங்கும் வரை அதனை ஒழிக்க மாட்டோம் என்ற தொனியிலும் அவர் கருத்து வெளியிட்டிருந்தார்.
அப்படியென்றால், தமிழர்களுக்கான நியாயமான தீர்வு என்ன? என்பதை அவரால் கூறமுடியவில்லை. தற்போது ஆளும் தரப்பை விட எதிர்கட்சிகளான சிங்கள, தமிழ், முஸ்லீம், கட்சிகளுக்கு மாகாணசபை தேர்தல் தேவை யாக உள்ளது மாகாணசபை தேர்தலில் தமது பலத்தை காட்டுவது மட்டுமே.
வடகிழக்கில் உள்ள தமிழ்த்தேசிய கட்சிகளும் அதிகாரப்பரவலாக்கத்துக்காக மாகாணசபை தேர்தலை இப்போது கோரவில்லை மாறாக ஆட்சியில் ஆசனங்களை பெற்று தமது பலத்தை நிருபிக்கவும் முதலமைச்சர் கதிரைகளை அலங்கரிக்கவும் பதவி ஆசைக்காகவுமே உடனே மாகாணசபை தேர்தலை பழைய  விகிதாசார முறையில்   நடத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக் கின்றனர். அறிக்கை விடுகின்றனர்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எதிர்க்கட்சி தலைவர் பதவியின் (இரா.சம்மந்தன்) 2015 தொடக்கம் 2020 வரை செயல்பட்டது. இந்த காலப்பகுதியான 2017 செப்டம்பர் 22 ல் நிறைவேற்றப்பட்ட மாகாணசபை புதிய திருத்தச் சட்டம் இலங்கையில் மாகாண சபைத் தேர்தல் களை நடத்துவதற்கான முறையை மாற்றுவதற்காக நிறைவேற்றப் பட்டது.
இச்சட்டத்தின்படி 60% வீதம் உறுப்பினர்கள் தொகுதி வாரியாகவும் மீதமுள்ள 40% வீதம் உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவ அடிப்படையிலும் தெரிவு செய்யப்பட வேண்டும். உள்ளூராட்சி மன்றங்களைப் போலவே மாகாண சபைகளிலும் பெண்களுக்கு 25% வீதம் இட ஒதுக்கீடு கட்டாயமாக்கப்பட்டது.
இந்த சட்டத்திற்கு அமைய மாகாண சபைத் தொகுதிகளை மீளமைக்க குழுக்கள் அமைக்கப்பட்டன. ஆனால் அது நடைமுறையில் தாமதம் ஏற்பட்டதாலும், சட்டச் சிக்கல்கள் எழுந்ததாலும் இச்சட்டம் நடைமுறைப் படுத்தப்படுவதில் தொடர்ச்சியாக நல்லாட்சி தொடக்கம் தற்போது வரை சிக்கல் தொடர்கிறது.
இதன் காரணமாக மாகாண சபைத் தேர்தல்கள் காலவரையறையின்றிப் பிற்போடப்பட்டு, பல வருடங்களாக மாகாண சபைகள் மக்கள் பிரதிநிதிகள் இன்றி இயங்காமல் உள்ளன. இந்த இழுபறிக்கு இலங்கையில் உள்ள சகல கட்சிகளும் நல்லாட்சி காலத்தில் விட்ட தவறாகும்.
2017 ல் நல்லாட்சிக்கு முட்டுக்கொடுத்த அனைத்து கட்சிகளும் மாகாணசபை திருத்த சட்டத்தை எதிர்க்க வில்லை. அப்போது நல்லாட்சி அரசை தூக்கி தலையில் வைத்து கொண்டாடும்போது மாகாணசபை சட்டமூலத்தை திருத்தத்தை தமிழரசுக்கட்சி உட்பட அனைத்து கட்சிகளும் ஏற்றனர். அன்று ஆதரவு வழங்கிய எல்லா கட்சிகளுக்கும் இப்போது தங்களுடைய பதவி ஆசைகளுக்காக மாகா ணசபை தேர்தல் தேவைப்படுகிறது என்பதே உண்மை.
அதிகாரப்பரவலுக்காக இதில் எவருமே மாகாண சபை தேர்தலை கோரவில்லை. தமது கட்சிகளின் செல் வாக்கை நிருபிக்கவும், முதலமைச்சர் பதவிகளை பெறவும் மாகாணசபை தேர்தலை பயன்படுத்த பார்ப்பதே சகல எதிர் கட்சிகளின் கொள்கையாக உள்ளது.