மலேசியாவில் 117 சட்டவிரோத குடியேறிகள் கைது

மலேசியாவின் Sandakan மாவட்டத்தில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், 117 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“குடிவரவுச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 117 பேரில் 115 பேர் பிலிப்பைனியர்கள் மற்றும் இருவர் இந்தோனேசியர்கள். இவர்களிடம் எவ்வித முறையான ஆவணங்கள் இல்லை,” எனக் கூறியிருக்கிறார் Sabah மாநில குடிவரவுத்துறை இயக்குனர் முகமது சதெ.

இத்தேடுதல் நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட 117 பேரும் Sandakan குடிவரவுத்துறை தடுப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.