மருதமுனையில் இரு முஸ்லிம் இளைஞர்கள் கைத்துப்பாக்கியுடன் கைது சம்மாந்துறையில் வெடிபொருட்கள் மீட்பு

அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்புமடு முஸ்லிம் பிரதேசத்தில் வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள அதேவேளையில் மருதமுனையில் முஸ்லிம் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் சம்மாந்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினை அடுத்து இந்த வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

அப்பிரதேசத்தில் கல்குவாரி அருகே பாவனையற்ற காணியில் புதைக்கப்பட்ட நிலையில் அமோனியா ஜெலக்னைட் குச்சிகள் உள்ளிட்ட பல்வேறு வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

குறித்த வெடிபொருட்கள் தொடர்பாக சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமுனையில் கைத்துப்பாக்கிகள் வைத்திருந்தவர்களை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

மருதமுனை பெரிய நீலாவணை எல்லைப் பகுதியில் வைத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து கார் ஒன்றில் பயணம் செய்த நிலையில் மருதமுனை பெரிய நீலாவணை எல்லைப் பகுதியில் இவர்கள் கைதாகினர்.

இவ்வாறு கைதானவர்கள் கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு செல்லப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.