மன்னார் சுகாதார உத்தியோகஸ்தர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

சுகாதார தொழிற்சங்கத்தின் ஒன்றியம் மற்றும் மன்னார் சுகாதார உத்தியோகஸ்தர்கள் இணைந்து 14 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இன்று வெள்ளிக்கிழமை(11) காலை தொடக்கம்  மன்னார் பொது வைத்தியசாலை மற்றும் முருங்கன் ஆதார வைத்தியசாலை வளாகத்தினுல்  பணிப்புறக்கணிப்பு போராட்டம்  ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

IMG 1026 மன்னார் சுகாதார உத்தியோகஸ்தர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

இம்மாதம் 03 ஆம் திகதி தங்களால் மேற்கொள்ளப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கையின் போது முன்வைத்த கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப் படவில்லை என சுகாதார உத்தியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

சுகாதார உத்தியோகஸ்தர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளாக, இலங்கையினுடைய சுகாதார அமைச்சுக்கு தாங்கள் முன்வைத்த கோவிட்-19 தொற்று நோய் தொடர்பான முடிவெடுத்தலில் ஒருங்கிணைந்த தொழிற்சங்க குழுவையும் இணைத்தல், வைத்தியசாலை பணிக்குழுவினருக்கு தங்குதடையின்றி போதியளவு  சுய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும்.

IMG 1029 மன்னார் சுகாதார உத்தியோகஸ்தர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

வைத்திய சாலையில் உள்ள கோவிட் கட்டுப்பாட்டு குழுவில் தொழிற்சங்க பிரதிநிதிகளையும் இணைத்துகொள்ளவேண்டும்.பொது நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்று நிருபத்திற்கு அமைய கர்பிணி சுகாதாரதுறைசார் ஊழியர்களுக்கு விசேட விடுமுறைக்கான சுற்று நிருபம் வெளியிடப்படவேண்டும்.

IMG 1026 1 மன்னார் சுகாதார உத்தியோகஸ்தர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

பயணதடை காலத்தில் சுகாதாரதுறை சார் பணிக்குழுவினருக்கு சிறப்பு போக்குவரத்து வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும. அணைத்து பணிகுழு வெற்றிடங்களையும் நிறப்ப வேண்டும்.

கோவிட் தடுப்பூசி இதுவரை ஏற்றாத பணிகுழுவினருக்கு உடனடியாக ஏற்ற வேண்டும் போன்ற 14 அம்ச கோரிக்கைகளை  முன்வைத்துள்ளனர்.

IMG 1030 மன்னார் சுகாதார உத்தியோகஸ்தர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

தங்கள் பக்கம் நியாயம் இருப்பதை அறிந்தும் அமைச்சு தங்களை உதாசீனம் செய்வதை அறியக்கூடியதாக உள்ளதெனக் கூறும் சுகாதார உத்தியோகஸ்தர்கள், இன்று ஐந்து தொழில் சங்கங்கள் இணைந்து இந்த வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொண்டுள்ளதாகவும் இந்த போராட்டம் தொடர வேண்டுமா இல்லை இன்றுடன் முடிவடைய வேண்டுமா என்பது இலங்கையில் சுகாதார திணைக்களத்தின் முடிவிலே இருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளனர்.