மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் அம்பிகா ராஜினாமா; யாழில் களமிறங்குகிறார்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஒரேயயாரு தமிழ் உறுப்பினரான செல்வி அம்பிகா சற்குணநாதன் தமது பதவியை இராஜினாமாச் செய்திருக்கின்றார்.

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் தானும் சேர்ந்து அனுசரணைப் பணி வகித்து நிறைவேற்றிய தீர்மானத்திலிருந்து இலங்கை வெளியேறியமையை ஆட் சேபித்தே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இருந்து அவர் பதவி விலகினார் எனக் கூறப்பட்டது.

ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட இந்த ஆணைக்குழுவின் தலைவர் உட்பட நால்வர் பெண்கள். தமிழர் அம்பிகா மாத்திரமே. அவர் இந்த ஆணக்குழுவின்
இரண்டாவது ஐந்து ஆண்டுகள் பதவிக்காலத்தின் மத்தியிலேயே அதனை இடைநடுவில் துறந்திருக்கின்றார்.

பதவி துறந்திருக்கும் அம்பிகா நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் தமிழ்த் தெசியக் கூட்டமைப்பின் வெட்பாளராகப் களமிறங்கவிருப்பதாக தெரியவந்திரக்கின்றத. தமிழரசுக் கட்சியின் சார்பில் களமிறங்கம் இரண்ட பெண் வேட்பாளர்களில் இவரும் ஒரவர் எனத் தெரிகின்றத. இத குறித்த உத்தியொகபூர்;வ அறிவிப்பு பின்னர் வெளியாகம்.