மட்டக்களப்பை வந்தடைந்தது அன்னை பூபதியின் நினைவு ஊா்த்தி – அஞ்சலி நிகழ்வுகள் நாளை

6 மட்டக்களப்பை வந்தடைந்தது அன்னை பூபதியின் நினைவு ஊா்த்தி - அஞ்சலி நிகழ்வுகள் நாளைதமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி மட்டக்களப்பில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாகதீபம் அன்னை பூபதியின் 36 வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு அவரது உருவப்படம் தாங்கிய ஊர்தி இன்று வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி நகரை வந்தடைந்தது.

இந்நிலையில் உயிர்நீத்த தியாகதீபம் அன்னை பூபதியின் உருவப்படத்திற்கு அப்பகுதி மக்கள் சுடர் ஏற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

அன்னையின் உருவப்படம் தாங்கிய ஊர்தி யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பமாகியிருந்தது. நாளை வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் அமைந்துள்ள அன்னாரது நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் ஏற்பாட்டில் இவ்வூர்தி பவனி இடம்பெற்று வருகின்றது.