போா்க் காலத்தில்கூட எமது தேசத்தில் பொருளாதார நெருக்கடி இருக்கவில்லை – நாடாளுன்றத்தில் கஜேந்திரன் சுட்டிக்காட்டு

“யுத்த காலத்தில் எமது தேசத்தில் பொருளாதார நெருக்கடி இல்லாமைக்கு பிரதானமான காரணம் உண்மையும், நேர்மையும் அர்ப்பணிப்பும் உள்ள தலைவர் ஒருவர் எமக்கு இருந்தார். யுத்தம் நிறைவடைந்து 14 ஆண்டுகள் கடந்துள்ளன. சர்வதேசத்திடம் உதவிகள் மற்றும் கடன்களை பெற்றுள்ளீர்கள்” என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், “20 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு நிர்வாக அரசை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நடத்தியிருந்தார். அவர் பொருளாதார ரீதியாக தமிழர் தேசத்தை ஸ்திரப்படுத்தியிருந்தார்.

மக்கள் பொருளாதாரத்தின் செழுமையை அனுபவித்ததுடன், ஒரு பாதுகாப்பான சூழலில் வாழ்ந்திருந்தனர். 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்திருந்த தருணத்தில் தமிழீழ வைப்பகத்தில் இருந்து மீட்கப்பட்ட தங்கங்கள் ஊடாக அதனை புரிந்துக்கொள்ள முடியும்.

நீங்களும் யுத்தம் செய்தீர்கள். உங்களின் இன அழிப்பில் இருந்து தப்பித்துக்கொள்ள எங்களது தேசமும் யுத்தம் செய்தது. யுத்த சூழல் மற்றும் பொருளாதார தடைகளுக்கு மத்தியில் எங்களது தேசம் பொருளாதார ரீதியில் வளர்ச்சிக்கண்டிருந்தது.

யுத்தக்காலத்தில் எமது தேசத்தில் பொருளாதார நெருக்கடி இல்லாமைக்கு பிரதானமான காரணம் உண்மையும், நேர்மையும் அர்ப்பணிப்பும் உள்ள தலைவர் ஒருவர் எமக்கு இருந்தார். யுத்தம் நிறைவடைந்து 14 ஆண்டுகள் கடந்துள்ளன. சர்வதேசத்திடம் உதவிகள் மற்றும் கடன்களை பெற்றுள்ளீர்கள்” என்று கஜேந்திரன் மேலும் தெரிவித்தாா்.