போராட்டம் ஐந்து வருடத்தை எட்டியது-தொடர்ந்து போராடுவோம் என உறவுகள் அறிவிப்பு

வவுனியாவில் தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சிமுறையலான உணவுதவிர்ப்பு போராட்டம்  ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் நான்குவருடங்கள் பூர்த்தியாகியது.
இதனையடுத்து குறித்த உறவுகளால் இன்று மதியம் கவனயீர்ப்பு போராட்டமொன்று  முன்னெடுக்கப்பட்டது.
IMG20210224132454 போராட்டம் ஐந்து வருடத்தை எட்டியது-தொடர்ந்து போராடுவோம் என உறவுகள் அறிவிப்பு
இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள்,
எமது போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்று ஐந்துவருடங்களை எட்டுகின்றது. எமக்கான நீதி கிடைக்கவில்லை. எமது போராட்டங்களில் பங்குபற்றிய பல தாய் தந்தையர்கள் பிள்ளைகளை காணாத ஏக்கத்துடனேயே உயிழந்துள்ளனர்.
எமது பிள்ளைகள் அழிக்க முடியாத சாட்சிகளாகியுள்ளனர். அவர்களிற்கு நீதி கிடைக்கும்வரை எமது போராட்டம் தொடரும். அந்தவகையில் அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகளை நாம் எதிர்ப்பார்த்து நிற்கிறோம் என்றனர்.