போராட்டக்காரர்கள் மீது மனிதாபிமானம் இல்லாமல் தாக்கும் அமெரிக்க இராணுவம்

அமெரிக்காவில் பொலிசார் கறுப்பின இளைஞரின் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்கள் நடைபெறுகின்றன. அத்துடன் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த அமெரிக்க இராணுவத்தின் பொலிஸ் பிரிவினர் நடந்து கொள்ளும் விதங்கள் காணொளிகளாக வெளிவந்த வண்ணம் உள்ளன.

போராட்டக்காரர்களை நெஞ்சில் தாக்குதல், காரால் மோதுவது, சைக்கிளை எடுத்து தூக்கி எறிவது போன்ற பல்வேறு வகையான தாக்குதல் சம்பவங்களை காணொளிகள் எடுத்துக் காட்டுகின்றன.

இதேவேளை போராட்டக்காரர்கள் வெள்ளை மாளிகையை நேற்று முற்றுகையிட்டதுடன், அருகிலிருந்த கட்டடத்தின் ஜன்னல்களையும் கார்களையும் கொளுத்தியதால் வெள்ளை மாளிகையைச் சுற்றிலும் புகை மண்டலமாக காட்சியளித்தது.