பொலநறுவையில் போட்டியிடுவார் மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளார் எனவும், அத்தோடு அவர் பொலனறுவை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டணியில் போட்டியிடவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலில் இதனை அவர் உறுதிப்படுத்தியிருக்கின்றார்.