பொது ஜன பெரமுனவுக்கு எதிராக 150 முறைப்பாடுகள்; வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம்

தேர்தல் வாக்களிப்பு தினமான நேற்று காலை ஏழு மணிமுதல் ஐந்து மணிவரை இடம்பெற்ற தேர்தல் வன்முறைகள் குறித்த முழுமையான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் ஸ்ரீலங்கா பொது ஜனபெரமுனவுக்கு எதிராக 150 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக 34 முறைப்பாடுகளும், இலங்கை தமிழரசுக்கட்சிக்கு எதிராக 17 முறைப்பாடுகளும் அதிகாரிகள் பொலிஸாருக்கு 37 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.

சட்டவிரோத தேர்தல் பிரச்சாரம் குறித்து 151 முறைப்பாடுகளும்,அச்சுறுத்தல் மற்றும் செல்வாக்கு செலுத்தல் தொடர்பில் 57 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.

கண்டியிலிருந்து 34 முறைப்பாடுகளும் யாழ்ப்பாணத்திலிருந்து 20 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளதாக தேர்தல் வன்முறைகளை கண்;காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.