விகிதாசார முறைப்படி நடைபெறும் இறுதித் தேர்தலாக இதுவே இருக்கும்; ரணில் விக்கிரமசிங்க கருத்து

விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையின் கீழ் நடைபெறும் இறுதிதேர்தல் இதுவாகத்தானிருக்கும் என கருதுவதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தேர்தலில் வாக்களித்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்போது, “நாட்டில் விகிதாச்சார முறையில் இடம்பெறவுள்ள இறுதி தேர்தல் இதுவாகத்தானிருக்கும் என கருதுகின்றேன் என குறிப்பிட்டுள்ள ரணில்விக்கிரமசிங்க நாங்கள் ஆட்சியிலிருந்தவேளை விகிதாச்சார பிரதிநிதித்துவம் அற்ற கலப்பு முறையொன்று குறித்து சிந்தித்திருந்தோம்” என சுட்டிக்காட்டியுள்ளார்.

அது குறித்து இணக்கப்பாடொன்றை உருவாக்குவதற்காக நாங்கள் முயற்சிகளை மேற்கொள்வோம் என குறிப்பிட்டுள்ளார்.

இறுக்கமான சுகாதாரநடைமுறைகளின் தேர்தலை நடத்தியமைக்காக தேர்தல் ஆணைக்குழுவை முன்னாள் பிரதமர் பாராட்டியுள்ளார். முன்னைய தேர்தல்களுடன் ஒப்பிடும்போது இந்த தேர்தலில் இணைய சமூக ஊடக பிரச்சாரங்கள் தனித்துவமானவையாக காணப்பட்டன அவை தொடரும் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.