ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெறும்; சஜித் பிரேமதாச நம்பிக்கை

பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெறும் என அதன் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்திருக்கின்றார்.

பொதுத் தேர்தலில் தனது மனைவியுடன் சென்று வாக்களித்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர், தமது கட்சி இத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை வெளியிட்டார்.