பிரேத அறையாக மாறும் பிரித்தானியாவின் மிகப்பெரும் விமான நிலையம்

பிரித்தானியாவின் மிகப்பெரும் விமான நிலையங்களில் ஒன்றான பெர்மிங்கம் விமான நிலையம் தற்போது பிரேதங்களை பராமரிக்கும் நிலையமாக மாற்றப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாளுக்கு நாள் கொரோனா வைரசின் தாக்கத்தால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதைத் தொடர்ந்து பிரித்தானியா அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக மேற்குப் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆரம்ப கட்டமாக இந்த நிலையம் 1500 பிரேதங்களை பராமரிக்கும் தகமை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

அதேசயம், கிழக்கு லண்டன் எக்செல் மாநாட்டு மண்டபம், மற்றும் மன்செஸ்ரர் மாநாட்டு மண்டபம் ஆகியன தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றப்பட்டுள்ளன.