பிரான்ஸில் உள்ள Saint-Pierre-et-Saint-Paul cathedral தேவாலயம் நேற்று (18) இடம்பெற்ற தீ விபத்தினால் சேதமடைந்துள்ளது.
60 இற்கு மேற்பட்ட தீயணைப்பு படையினர் தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோதும் தேவாலயம் கடும் சேதமடைந்துள்ளது. கடந்த வருடம் நோட் டேம் என்ற பிரசித்திபெற்ற தேவாலையம் தீயினால் பேரழிவைச் சந்தித்த நிலையில் தற்போது மற்றுமொரு தேவாலையம் அழிவை சந்தித்துள்ளது. தீவிபத்துக்கான காரணம் தெரியவில்லை.
1972 ஆம் ஆண்டும் இந்த தேவாலையம் தீவிபத்தினால் சேதமடைந்து 3 வருடங்கள் மூடப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.