பிரதேச சபையில் உயிரிழந்தவர்களிற்கு அஞ்சலி!!

கடந்தவருடம் இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் சாவடைந்தவர்களிற்கும்,தற்போது உலகளவில் அச்சுறுத்தலாகியுள்ள கொரோனோ வைரஸ் தொற்றினால் சாவடைந்தவர்களிற்குமான அஞ்சலி நிகழ்வு வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை மண்டபத்தில் இன்றயதினம் இடம்பெற்றது.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் மாதாந்த அமர்வு நெளுக்குளத்தில் அமைந்துள்ள சபையின் அலுவலகத்தில் தவிசாளர் து.நடராஜசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது சபை அமர்வு ஆரம்பிப்பதற்கு முன்னர் அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று மௌனஅஞ்சலி செலுத்தியதுடன், உயிரிழந்தவர்களின் நினைவாக மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
unnamed 1 2 பிரதேச சபையில் உயிரிழந்தவர்களிற்கு அஞ்சலி!!

unnamed 5 பிரதேச சபையில் உயிரிழந்தவர்களிற்கு அஞ்சலி!!