பிரதேசசெயலக உத்தியோகத்தர்களின் கைவண்ணத்தில் உருவான படைப்புக்கள்

சண்டிலிப்பாய் பிரதேசசெயலக உத்தியோகத்தர்களின் கைவண்ணத்தில் உருவான படைப்புக்களின் சிறிய கண்காட்சி ஒன்று சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் கடந்த புதன்கிழமை(3) இடம்பெற்றுள்ளது.

sandilipay பிரதேசசெயலக உத்தியோகத்தர்களின் கைவண்ணத்தில் உருவான படைப்புக்கள்சூழல் நேய பொருட்கள் மற்றும் மீள் சுழற்சிக்குட்படுத்தக்கூடிய பொருட்களைக் கொண்டு  பிரதேச செயலாளரின் வழிகாட்டலின்கீழ் பிரதேச செயலகத்தில் பணியாற்றும் பணியாளர்கள் இந்த பொருட்களை தயாரித்திருந்தனர்.

எமது உத்தியோகத்தர்களிற்குள் மறைந்திருக்கும் கலைத்திறன் ஆற்றல்களையும் கலை ஆர்வத்தினையும் வெளிக்கொணரும் வகையில் உருவாக்கப்பட்ட ஆக்கங்களை உங்கள் பார்வைக்கு காட்சிப்படுத்துவதில் சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் பெருமை கொள்கின்றது என அதில் பணியாற்றும் பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.