பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் மற்றும் மருத்துவ பீட சிற்றுண்டிச் சாலை நடத்துனர் ஆகியோர் இன்று (16) ஒரு ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவருடைய புகைப்படங்கள், பதாகைகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இவர்கள் கடந்த 3 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை கைது செய்யப்பட்டிருந்தனர்.

fai பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை

இந்த கைதுகள் தமிழர் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல்கொடுத்துவரும் பல்கலைக்கழக மாணவ சமூகத்தை அச்சுறுத்தி அடக்கும் ஒரு நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. முல்லவாய்க்கால் இனவழிப்பு நாள் கடைப்பிடிக்கப்படவிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் இந்த கைதுகள் உள்நோக்கம் கொண்டவையாகவே நோக்கப்படுகின்றன.

இக்கைதுகள் தொடர்பில் பல்வேறுதரப்பிலும் இருந்து பலத்த கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுவந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.