பரவும் கொரோனா வைரஸ்! தென்னிலங்கையில் குவிந்த வெளிநாட்டவர்களால் குழப்பம்

தென்னிலங்கையில் குவிந்த பெருமளவு வெளிநாட்டவர்களால் மக்கள் மத்தியில் அச்ச நிலைமை ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் காலி கோட்டையில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் காண முடிந்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் அதிகமானோர் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இலங்கை வந்த சுற்றுலா பயணிகள் எனத் தெரிய வந்துள்ளது.

இலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் குறித்து பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த சுற்றுலா பயணிகள் எந்தவொரு பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி நடமாடுவது குறித்து மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளிலிருந்து இலங்கை வந்தவர்களால் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரவமாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.