பயம் எம்மை ஆட்கொள்ள அனுமதிக்க வேண்டாம் – புனித ஞாயிறு செய்தி

உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் புனித ஞாயிறு தினத்தை இன்று கொண்டாடி வருகின்றனர். கொரோன அச்சம் காரணமாக பல ஆராதனைகள் காணொளி ஊடாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வத்திக்கானில் உள்ள சென் பீற்றேர்ஸ் புனித தேவாலையத்தில் மூடிய கதவுகளினுள் ஆராதனை வழிபாடுகள் பேராயர் பிரான்ஸிஸ் தலைமையில் இடம்பெற்றது. அவர் தனது செய்தியை இணையத்தளம் ஊடாக வழங்கியிருந்தார்.

கடந்த ஆண்டு வத்திக்கனில் இடம்பெற்ற ஆராதனைகளில் 70,000 மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதனிடையே, இன்றைய நிலையில் பயம் எம்மை ஆட்கொள்ள நாம் அனுமதிக்ககூடாது என பிரித்தானியாவின் கன்ரபெரி பேராயர் ஜஸ்ரின் வெல்பி தெரிவித்துள்ளார்.

church 2020 holy sunday பயம் எம்மை ஆட்கொள்ள அனுமதிக்க வேண்டாம் - புனித ஞாயிறு செய்தி

நெருக்கடியான நிலைகளில் நாம் எவ்வாறு நடக்கவேண்டும் என்பதை தேவாலையங்கள் மக்களுக்கு முன்னுதாரணமாக காண்பிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.