“பணயக் கைதியாக இருக்கிறேன்!” – அமீரக இளவரசி 

ஐக்கிய அரபு அமீரகத்தின் (யுஏஇ) துணைத் தலைவரும், பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமின் மகள் ஷேக்  லத்தீஃபா. இவர் அந்தநாட்டு இளவரசிகளுள் ஒருவர்.

இளவரசி லத்தீஃபா கடந்த 2002 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வெளியேற முயன்று பிடிபட்டார். இதன்பிறகு கடந்த 2018 ஆம் ஆண்டு, மீண்டும் அங்கிருந்து வெளியேற முயன்ற அவரை, இந்திய-ஐக்கிய அரபு படைகள் கண்டுபிடித்து மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கே கொண்டு சென்றனர். அதன்பிறகு அவர் பொதுவெளியில் தோன்றவில்லை.

 இந்த நிலையில் அவர் பகிர்ந்த காணொளிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இளவரசி லத்தீஃபா அந்த காணொளியில்,, “நான் பணயக் கைதியாக இருக்கிறேன். நான் இருக்கும் வீடு சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும்  காவல்துறையினர் காவல்காக்கின்றனர்.   நாளும் நான், எனது பாதுகாப்பு மற்றும் எனது வாழ்க்கையைப் பற்றி கவலைப்படுகிறேன். இந்தச் சிறையில்  நான் பணயக் கைதியாக இருக்க விரும்பவில்லை. நான் சுதந்திரமாக இருக்க விரும்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில், தந்தை பிரதமராக இருக்கும் நாட்டில், பணயக் கைதியாக இருப்பதாக மகள் கூறியுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி பிபிசி தமிழ்