நிலங்களை அபகரித்தால் சிவில் நிர்வாகம் முடங்கும் – சிவாஜிலிங்கம் எச்சரிக்கை

பொதுமக்களின் நிலங்களை அபகரிப்பதற்கான முயற்சிகள் மீண்டும் இடம்பெற்றால் வடக்கு-கிழக்கில் சிவில் நிர்வாகம் முடங்கும் நிலையேற்படும் என முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மண்டைதீவில் பொது மக்களின் காணிகளை இராணுவத்தினர் சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட வேளை அதனை கண்டித்து பொது மக்களும் தமிழ் அரசியல்வாதிகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

“போன தடவையும் பொலிஸார் பேருந்து உடன் தான் வந்தனர். நீங்கள் மீண்டும் திருப்பி வரமுயற்சி செய்தால் நாங்கள் பகிரங்கமாக சொல்கின்றோம் , பிரதேச செயலகம், மாவட்ட செயலகம் உட்பட அனைத்தும் முடங்கும். சிவில் நிர்வாகம் முடக்கப்படும். வடக்கு-கிழக்கு முழுவதும் சிவில் நிர்வாகம் முடங்கும் நிலையேற்படும்” என்றார்.