நீதி அமைச்சரின் பதவி விலகல் தவறான செய்தி – சிறீலங்கா அரசு

சிறீலங்கா நீதி அமைச்சர் அலி சப்ரி அவர்கள் தனது பதவியில் இருந்து விலகியதாக வெளிவந்த செய்தி தவறானது என அமைச்சரின் செயலாளர் சமீர் சவாகீர் இன்று (29) தெரிவித்துள்ளார்.

பொறுப்பற்ற முறையில் தவறான செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டது மிகவும் வருத்தத்திற்குரியது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அமைச்சர் தனது பதவி விலகல் கடிதத்தை சிறீலங்கா அரச தலைவர் கோத்தபாயா ராஜபக்சாவிடம் வழங்கியதாகவும், ஆனால் கோத்தபாயா அதனை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்திருந்தது.

கொரோனோ வைரஸின் தாக்கத்தினால் இறக்கும் முஸ்லீம் மக்களின் உடல்களை எரிப்பது தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்து முஸ்லீம் சமூகத்தவர் அமைச்சர் மீது அதிக அழுத்தங்களை பிரயோகித்ததாக அது மேலும் தெரிவித்திருந்தது.