Home செய்திகள் நாவலியில் 147 அப்பாவிப் தமிழர்கள் கொல்லப்பட்டமைக்கு இதுவரை நீதியில்லை – நாடாளுமன்றில் சிறிதரன்

நாவலியில் 147 அப்பாவிப் தமிழர்கள் கொல்லப்பட்டமைக்கு இதுவரை நீதியில்லை – நாடாளுமன்றில் சிறிதரன்

1995 ஆம் ஆண்டு நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் சந்திரிகா அரசு நடத்திய வான் தாக்குதலில் 147 பேர் கொல்லப்பட்ட நினைவு தினம் இன்றாகும்.அதே நவாலி படுகொலைகள் போல சின்னக்கதிர்காமத்திலும் மக்கள் படுகொலை செய்யப்பட்ட தினம்.

நவாலி படுகொலையில் உடல்சிதறி துடிக்க படுகொலை செய்யப்பட்டமை அங்கு இரத்த ஆறு ஓடியமை ஐ நாவிலும் உலக அளவிலும் பதியப்பட்டுள்ளது. அந்த துன்பத்தை இன்று நான் சபையில் நினைவுகூருகிறேன்.அப்படியான பல இழப்புக்களை குறிப்பாக உயிரிழப்புக்களை தமிழினம் ஒருபோதும் மறக்காது.

அப்படியான இனப்படுகொலைகளுக்கு இன்றுவரை நீதியில்லை.எல்லோரும் அதை மறந்து செயற்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிலங்கா நாடாளுமன்றில் உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.