தேர்தலில் வாக்களித்து தமது இனத்தை காப்பதற்கு நாடு திரும்பும் சிங்களவர்கள்

எதிர்வரும் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் ஒன்றரை இலட்சம் பேர் நாடுதிரும்ப உள்ளதாக அறிய முடிகின்றது. இவர்களில் பெரும்பாலனவர்கள் சிங்கள சமூகத்தை சேர்ந்தவர்கள்.
இவர்கள் தங்களுக்கான விமானப் பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்துள்ளனர். ஜப்பான், சீனா, இங்கிலாந்து, சௌதி அரேபியா, இத்தாலி, கொரியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் தொழில் புரிபவர்களே தேர்தலில் வாக்களிக்க நாடு திரும்பவுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர், நாட்டின் மேல் மாகாணம், மற்றும் தென் மாகாணத்தைச் சேர்ந்தவர்களேயாவார். இவர்கள் எதிர்வரும் 8ஆம் திகதி நாடு திரும்பவுள்ளனர்.

இவர்களின் வருகையால், 08ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை இலங்கை வரும் விமானங்களில் விமானப் பயணச் சீட்டு பெறுவது மிகவும் கஸ்டமாக உள்ளதாகவும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.