தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாதிரிக் கிராமம்

மன்னாரில் தேசிய  வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாதிரி கிராம வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை வைபவ ரீதியாக நடைபெற்றது.

மன்னார் பிரதேச சபை பிரிவிற்குட்பட்ட மன்னார் – தலைமன்னார் வரை சுமார் 12 மாதிரி வீட்டுத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இத்திட்டத்தில் 322 வீடுகள் அமைய இருக்கின்றன.

மன்னார் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் முகாமையாளர் செல்வராஜ் குலாஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுகளில் மன்னார்  பிரதேச சபை தவிசாளர் எம்.முஜாகீர் மற்றும் உறுப்பினர்கள், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.