Home செய்திகள் தெரிவுக்குழு முன் சமூகமளிக்க மைத்திரி மறுப்பு

தெரிவுக்குழு முன் சமூகமளிக்க மைத்திரி மறுப்பு

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை விசாரிக்கும் பாராளுமன்ற தெரிவுக்குழு எனக்கு அழைப்பு விடுத்தால் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளமாட்டேன். அது அலரி மாளிகையில் தயாரிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் மேடையேற்றப்படும் நாடகம் என்று தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.

அவசரகால சட்டம் இந்த முறை மட்டுமே நீட்டிக்கப்படும். அடுத்த தடவை அது நீடிக்கப்படமாட்டா து என்று தெரிவித்த ஜனாதிபதி,அண்மைய தற்கொலை தாக்குதல்கள் குறித்தான விசாரணை திருப்தியாக உள்ளது. பிரதான சந்தேகநபர்கள் இறந்துவிட்டனர். ஏனையோர் கைது செய்யப்பட்டுவிட்டனர் என்றும் தெரிவித்துள்ளார்.

ஊடக பிரதானிகளுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்ட தகவல்களை தெரிவித்துள்ளார்.