தென்கொரியாவில் 4,800 பேர் பாதிப்பு, அமெரிக்காவில் 6 பேர் பலி

கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், உலகம் முழுவதும் இதுவரையில் 3,056 பேர் பலியாகியுள்ளதுடன், 90,000 பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு அடுத்த நிலையில் தென்கொரியா அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆசியாவின் நான்காவது பெரும் பொருளாதார நாடான தென்கொரியாவில் 4,800 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 34 பேர் மரணமடைந்துள்ளனர். அமெரிக்காவிலும் 6 பேர் மரணமடைந்துள்ளனர்.

பிரித்தானியாவில் 40 இற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கு ஒரு அச்ச நிலை ஏற்பட்டுள்ளதுடன், இத்தாலிக்கு சுற்றுலாவுக்கு சென்ற பாடசாலை மாணவர்கள் பலருக்கு பாடசாலைகளுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.