கப்பலில் வரும் பயணிகள் சிறீலங்காவில் தரையிறங்க தடை

கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், சிறீலங்கா அரசு அதிக அச்சமடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கப்பலில் வரும் சுற்றுலாப் பயணிகள் சிறீலங்காவில் தரையிறங்குவதை உடனடியாக தடை செய்வதாக சிறீலங்கா சுகாதார அமைச்சர் அனில் ஜெயசிங்கா தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தென்கொரியா, இத்தாலி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளை 14 நாட்கள் தடுத்துவைக்க சிறீலங்கா அரசு திட்டமிட்டுள்ளது.

சீனாவுக்கு அடுத்ததாக இந்த 3 நாடுகளிலும் உள்ள மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.