சிவிகே சிவஞானத்தின் காலத்தில் இடம்பெற்ற முறைகேடுகள்.

யாழ்ப்பாண மாநகர சபையின் முன்னாள் ஆணையாளர் சிவிகே சிவஞானத்தின் காலத்தில்தான் யாழ்ப்பாண மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறுபட்ட சட்டவிரோத செயற்பாடுகள் நடைபெற்றதாக யாழ் மாநகர சபை உறுப்பினர் முடியப்பு றெமீடியஸ் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாநகர சபையில் இன்றைய தினம் இடம்பெற்ற வரும் மாதாந்த கூட்டத்தின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாநகர சபையின் முன்னாள் ஆணையாளர் சிவிகே சிவஞானத்தின் காலப்பகுதியில்தான் யாழ்ப்பாண மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறுபட்ட சட்டவிரோத வேலைத்திட்டங்களிற்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் அவற்றை இன்றுவரை நிவர்த்தி செய்ய முடியாதுள்ளதாகவும் யாழ்ப்பாண மாநகர சபையின் ஈபிடிபி கட்சியின் உறுப்பினர் முடியப்பு ரெமீடியஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தற்போது மாகாண சபையின் அவைத் தலைவராக செயற்பட்டு வரும் சிவிகே சிவஞானம் யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளராக செயற்பட்டு வந்த காலத்தில் தான் யாழ்ப்பாண நகரப் பகுதியில் மக்கள் பாவனையிலிருந்த வீதி ஒன்று மூடப்பட்டு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

அதேபோல் பல்வேறுபட்ட சட்டவிரோத வேலைத்திட்டங்கள் அவருடைய காலத்தில் தான் நிறைவேற்றப்பட்டது அவற்றை இன்றுவரை திருத்திக் கொள்ள முடியாது காணப்படுவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.