மஹாரகம பிரதேசத்தில் துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி

வெல்லவாய-எதிலிவெவ-மஹாரகம பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் நபரொருவர் பலியாகியுள்ளார்.

குடாஓய பிரதேசத்தில் வசித்து வந்த 45 வயதுடைய நபரொருவரே இவ்வாறு துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி பலியாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவி்த்தனர்.

தனது மனைவியின் வீட்டுக்கு இன்று வருகைத் தந்திருந்த வேளையிலேயே இ்வ்வாறு துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ளதாகவும், இதற்கான காரணம் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.