உள்ளே செல்லவும் வெளியேறவும் தொடர்ந்து தடை.

அம்பாறை மாவட்டத்தின் உஹன மற்றும் தமன காவற்துறை பிரிவுக்குற்ப்பட்ட பகுதிகளில் தற்காலிகமாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் நேற்றைய தினம் வெலிசர கடற்படை முகாமில் உள்ள 29 சிப்பாய்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து குறித்த முகாம் பகுதி முடக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்த பகுதியில் மக்கள் உள்ளே செல்லவும் வெளியேறவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த தடையானது தொடர்ந்து அமுலில் இருக்குமென காவல்துறை ஊடக பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.