திலீபனின் நினைவு தினப் பேரணியை நடத்துவதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்குத் தடை

தியாகி திலீபனின் நினைவு தினத்தினை அனுஷ்டிப்பதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது

எதிர்வரும் 16 ஆம் திகதி வவுனியா பொங்கு தமிழ் தூபிக்கு முன்பாக இருந்து நல்லூர் வரை பேரணியயான்றினை நடத்துவதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தது.

இந்நிலையில் வவுனியா நகரசபை உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தரும் இந்த நிகழ்வின் ஏற்பாட்டாளருமான ஜானுஜன் பொலிஸில் அனுமதி பெற முற்பட்டவேளை அதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இவ்விடயத்தை உறுதிப்படுத்திய நகரசபை உறுப்பினர் ஜானுஜன், இது தொடர்பில் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றைச் செய்யவுள்ளார் எனவும் தெரிவித்தார்.