திறன் அபிவிருத்தி பிரிவின் தொழில் வழிகாட்டல் உப குழுவின் கலந்துரையாடல்

திருகோணமலை மாவட்ட செயலகத்தின் திறன் அபிவிருத்தி பிரிவின் தொழில் வழிகாட்டல் உப குழுவின் கூட்டமானது மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாராய்ச்சி  தலைமையில் (20) அன்று மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டமானது மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களின் வழிகாட்டலில் மாவட்ட திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2024 ஆம் ஆண்டுக்கான தொழில் வழிகாட்டல் தொடர்பான பொது செயற்றிட்டமொன்றை உருவாக்குவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் வழிகாட்டல் ஆலோசனைக்குரிய உதவி கல்வி பணிப்பாளர், திருகோணமலை மாவட்டத்தின் வலயக்கல்வி அலுவலகங்களின் தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர்கள் , ஆலோசனை வழிகாட்டல் உத்தியோகத்தர்கள், மாவட்டத்தின் தொழில் பயிற்சி நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள், உயர்கல்வி நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலகத்தின் துறைசார் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.