தமிழ்த் தேசியக் கட்சிகள் இன்று யாழ்ப்பாணத்தில் கூடுகின்றன – ஜெனிவா குறித்து ஆராயப்படும்

தமிழ் தேசிய கட்சிகள் மீண்டும் யாழ்ப்பாணத்தில் ஒன்று கூடவுள்ளன. இன்று முற்பகல் 10 மணிக்கு யாழ் புறநகரிலுள்ள விருந்தினர் விடுதியொன்றில் கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் சந்திக்கவுள்ளனர்.

எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் இந்த சந்திப்பு நடக்கின்றது. அனைத்து தமிழ்த் தேசிய கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட் டுள்ளது.

இந்தவகையான சந்திப்புக்களில் இது வரை தனியாக அழைக்கப்படாத ஜனநாயகப் போராளிகள் கட்சியினரும் இன்று அழைக்கப்பட்டுள்ளனர்.

ஜெனிவாவில் எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் குறித்தே இதன்போது முக்கியமாக ஆராயப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.