தமிழ்க் கட்சிக்களுக்கு புதிய தலைவர் தெரிவு

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் ஆகியோர் அரசியலில் இருந்து ஓய்வுபெறவுள்ளதாக இரு கட்சிகளுக்கும் புதிய தலைவர்கள் தெரிவு செய்யப்படபோவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்கு நாடாளுமன் உறுப்பினர் எஸ். சிறீதரன், எஸ். யோகேஸ்வரன் மற்றும் எம். ஏ சுமந்திரன் ஆகியோர் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அடுத்த மாதம் இடம்பெறும் பொதுக்குழு கூட்டத்தில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்.