தமிழர் பிரதிநிதிகளின் இயலாமை போராட்டத்தை வேறுதளத்திற்கு கொண்டு சென்றுள்ளது: மனோ

அம்பறை மாவட்ட தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தமிழ் தரப்பின் இயலாமை தற்போதைய கல்முனை பிரச்சனையை வேறு தளத்திற்கு கொண்டு செல்கிறது என்ற உண்மையை அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டும் என சிறீலங்கா அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது சமூகவலைத்தளத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

ஞானசார பௌத்த துறவி கல்முனை தமிழர் தரப்பு உண்ணாவிரதத்தை முதற்கட்டமாக கருதி முடித்துவைப்பதாக என்னிடம் இன்று தொலைபேசியில் தெரிவித்தார். அதற்கு நான் நன்றி, நல்லது செய்யுங்கள் என்று கூறினேன்.

ஆனால் அம்பறை மாவட்ட முஸ்லீம் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட முஸ்லீம் தரப்பின் பிடிவாதமும், தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தமிழ் தரப்பின் இயலாமையும் இந்த பிரச்சனையை வேறு தளத்திற்கு கொண்டு செல்கிறது என்ற உண்மையை அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.