தமிழக மீனவர்களின் உடல்கள் இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைப்பு

இலங்கை கடற்படை கப்பல் மோதி உயிரிழந்த  4  மீனவர்களின் உடல்களும் இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடுக்கடலில் இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதி, தமிழக மீனவர்களின் படகு மூழ்கியது, இந்த சம்பவத்தில் அதில் இருந்த நான்கு  பேரும் உயிரிழந்தனர்.

VideoCapture 20210123 131811 தமிழக மீனவர்களின் உடல்கள் இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைப்பு

இந்நிலையில்,குறித்த 4 பேரின் உடல்களும் இலங்கை கடற்கரையில் ஒதுங்கியிருந்த நிலையில், யாழ் வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு,  சர்வதேச கடல் எல்லையில் வைத்து இலங்கை கடற்படையினர், இந்திய கடலோர காவல்படை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.